பாம்பாட்டி சித்தனின் கவிதைகள், ஒரு குழந்தையின் ஆர்வமும் அவதானிப்பும் நிரம்பிய ஒரு விதமான பரிசோதனைகள். தொடர்ச்சியான பல்வேறு பரிசோதனைகளின் வாயிலாகத் தங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்பவை. இதனாலேயே இக்கவிதைகள் எதிர்காலத்திலிருந்து நிகழ் கணத்தில் இயங்கும் தன்மையுடையனவாக இருக்கின்றன. முரண்பாடுகளை அடித்தளமாகக் கொண்டிருக்கும் நவீன உலகம்/மனித வாழ்வு குறித்த வலி மற்றும் பகடியைப் பகிர்ந்துகொள்பவை. மாற்றுத் திறனாளி குழந்தைகளும் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளும் வலிப்பு நோயுற்ற குழந்தைகளும் இவரது கவிதை உலகினுள் ஊடாடுகின்றனர்.
No posts found